ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு : 35 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷியா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.

ரஷியா- உக்ரைன் இடையே இரண்டு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று காலை உக்‍ரைன், ரஷ்யா எல்லையில் பெல்கோரோட் மாகாணத்தில் ட்ரோன் தாக்‍குதல் நடத்தியது.
அங்குள்ள பொரிசோவ்ஸ்கி மாவட்டம் பெரோசோவ்கா கிராமம் அருகே ஒரு நிறுவன தொழிலாளர்கள் இரண்டு வாகனங்களில் சென்றனர். அப்போது உக்‍ரைனின் ட்ரோன்கள் தாக்‍கின. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

Night
Day