ரஃபா நகர் மீதான இஸ்ரேல் தாக்குதலை அமெரிக்காவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஃபா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்காவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், ரஃபா மீது தாக்குதலை நடத்த வேண்டாம் என இஸ்ரேலிடம் பேசும்படி அமெரிக்காவை கேட்டுக் கொள்வதாக கூறினார்.  இந்த குற்றத்தை இஸ்ரேல் செய்வதை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் ரஃபா மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தினால் கூட பாலஸ்தீனிய மக்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். அப்படி நடந்தால், பாலஸ்தீன மக்களின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவு நடக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

Night
Day