ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் தயார் நிலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கவுள்ள நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு தருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் தஞ்சம் புகுந்துள்ள ரஃபா நகரிலும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஃபாவில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க வேண்டாம் என எகிப்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பணயக் கைதிகளை விடுவிக்காமல் அதற்கு வழியில்லை என இஸ்ரேல் மறுத்துள்ளது. இந்தநிலையில் காணொலியில் பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை வெற்றி கொள்ள ரஃபா தங்களுக்கு தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.  ரஃபாவில் பதுங்கியுள்ள ஹமாஸ்களை அழிக்க ஒரு நாள் குறிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day