மைக்ரோசாஃப்ட் கணினிகளில் ஊடுருவிய ரஷ்ய ஹேக்கர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் இ மெயில் தகவல்களை திருடியது அம்பலம் ஆகியுள்ளது. இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் இ மெயில் பரிமாற்றங்கள் ரஷ்ய ஹேக்கர்களால் களவாடப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி கணினிகளில் ஊடுருவிய ஹேக்கர்கள், முக்கிய இ மெயில்கள் மற்றும் ஆவணங்களை திருடியதாகவும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அந்த ஹேக்கர்கள் குழு, கடவுச்சொல் ஸ்பிரே தாக்குதல் மூலம் தங்கள் நிறுவன கணினிகளில் ஊடுருவ முயற்சித்து வந்ததாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. 

Night
Day