உலகம்
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது - இந்தியா, பாகிஸ்தானிடம் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தம் - டிரம்ப்...
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கேரியா அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார். மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடித்திருந்தனர். இதையடுத்து, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல், கடந்த சனிக்கிழமை ரூயென் சரக்கு கப்பலையும் அதன் 17 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டது. இந்த நிலையில், கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் மற்றும் 7 பல்கேரிய குடிமக்கள் உள்ளிட்ட அதன் பணியாளர்களை மீட்ட இந்திய கடற்படையின் துணிச்சலான நடவடிக்கைக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...