6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 391 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 755ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மத்திய பிரதேசத்தில் 45 வயது பெண், மகாராஷ்டிராவில் 63 வயது ஆண், கேரளாவில் 59 வயது ஆண் மற்றும் தமிழ்நாட்டில் 79 வயது ஆண் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும்நிலையில், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Night
Day