எழுத்தின் அளவு: அ+ அ- அ
21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரில், பல்வேறு முக்கிய சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதில் சரக்கு மற்றும் சேவைகள் வரி திருத்தம் மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவிசார் பாரம்பரிய தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மசோதா உட்பட 8 புதிய மசோதா உள்பட 17 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது.
இவற்றை தவிர கடந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் புதிய வருமான வரி மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஏராளமான சட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது குறித்தும், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்தும், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட 8 முக்கிய பிரச்சனைகளுக்கு மத்திய அரசிடம் பதில் கேட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.