விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

விமான விபத்து தொடர்பான உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி, விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அவர் தெரிவித்தார். தொடர்ந்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், விஜய் ரூபானி  நம்மிடையே இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் மிகவும் சவாலான சில காலங்கள் உட்பட, இருவரும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் சித்தாந்தத்திற்கான அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்துள்ள மோடி, குஜராத்தின் முதலமைச்சராக அவர் விடா முயற்சியுடன் பணியாற்றியதாக பதிவிட்டுள்ளார்.

Night
Day