எழுத்தின் அளவு: அ+ அ- அ
முடா வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
2017-ம் ஆண்டு சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது மைசூரு நகர மேம்பாட்டு கழகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், முடா வழக்கில் கர்நாடக முதலமை ச்சர் சித்தராமையாவுக்கு தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 92 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம்-2002 ன் கீழ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவரை முடா வழக்கில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.