ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறிய காட்சி வெளியாகி உள்ளது. வரும் 22-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்காக, தமிழ்நாட்டில் இருந்து பட்டாசு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்து. உன்னாவ் பகுதி அருகே செல்லும் போது, லாரி திடீரென தீப்பிடித்துள்ளது. அப்போது லாரியில் இருந்த பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்த தீ, தீயணைப்பு துறையினரால் பெரும் போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.

Night
Day