மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தலையில் ரத்த காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நெற்றியில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி
நெற்றியில் காயம் ஏற்பட்டு முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

கட்சித் தலைவர் ஹரிஷ் சட்டர்ஜியின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்தபோது, தனது இல்லத்தில் மம்தா பானர்ஜி தவறி விழுந்ததாகவும், இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, அவர், எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் திரிணாமுல் கட்சி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Night
Day