மேற்குவங்கம் : ஷாஜகான் ஷேக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் சிபிஐ காவலில் உள்ள ஷாஜகான் ஷேக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஷாஜகான் ஷேக்குக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.  காலை 6.30 மணி முதல் சந்தேஷ்காலியில் முகாமிட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமாக்கலி உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நீண்ட போராட்டத்துக்கும் பிறகு கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, முதல்வர் மமதா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரான ஷாஜகான் ஷேக்கை  சிபிஐ வசம் மேற்கு வங்க போலீஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day