மேகதாது அணை கட்டுவதற்கு, பிரதமர் அனுமதி தர வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கோரியுள்ளார். பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனக் கூறிய அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்துள்ளோம் என்றார். ஆனால், பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக பாஜக குற்றம்சாட்டுவது திட்டவட்ட பொய் என கூறியுள்ள டி.கே. சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக பாஜக எம்.பி.க்கள், பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். 

Night
Day