மெகா மோசடிகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சத்தில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம் - பிரதமர் மோடி உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரசிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் குழந்தைகளை பிரதமராகவும் முதல்வராகவும் ஆக்க நினைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, காங்கிரசிடம் இருந்து நாட்டை பாதுகாக்‍க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளில் தூய்மையான ஆட்சியை அளித்துள்ளதாகவும், பொய் வாக்‍குறுதிகளை ஒருபோதும் அளிக்‍க மாட்டோம் என்றுட" தெரிவித்தார்.

முன்னதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக நாட்டின் வளர்ச்சிக்காகவும், காங்கிரஸின் கீழ் இருக்கும் இந்தியா கூட்டணி கட்சியினர் தங்களின் குடும்பத்துக்காகவுமே வேலை செய்வதாக அமித்ஷா குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நினைக்கும் அதே வேளையில், இண்டியா கூட்டணியில் குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் நிறைந்துள்ளதாக சாடிய அமித்ஷா, சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் குழந்தைகளை பிரதமராகவும் முதல்வராகவும் ஆக்க நினைப்பதாகவும் விமர்சித்தார்.

சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று  கூடியுள்ளதாக குறிப்பிட்ட அமித்ஷா, பாஜகவில் குடும்ப அரசியல் இருந்திருந்தால், தேநீர் விற்பவரின் மகன் நாட்டின் பிரதமராக வந்திருக்க மாட்டார் எனவும் தெரிவித்தார்.

Night
Day