மத்திய பிரதேசம்: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து - 14 பேர் பரிதாப பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டோரி பகுதியில் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனத்தில், பொதுமக்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். சரக்கு வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாங்களுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில் முதலமைச்சர் மோகன் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

Night
Day