மத்தியபிரதேசம்: ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் இடறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் எற முயற்சித்து, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்த முதியவரை ரயில்வே போலீசார் காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.  உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள நாக்டா ரயில் நிலைய சந்திப்பில் ஓடும் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயற்சித்துள்ளார். அப்போது கால் இடறி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் நொடிப் பொழுதில் சுதாரித்து முதியவரை மீட்டனர். 

Night
Day