போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க தனிப்பிரிவு - இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருவதாகவும், வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Night
Day