எழுத்தின் அளவு: அ+ அ- அ
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைவதாகவும் இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு மனமார்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும், இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.