போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இயக்குநர் அமீர் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக பிரமுகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக், டெல்லியில் கடந்த 9ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி திரைப்பட இயக்குனர் அமீருக்கு கடந்த 31ம் தேதி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. அதன்படி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார்.

Night
Day