புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு : ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில்  கடத்தல், அடைத்து வைத்தல், கொலை செய்தல், குற்றத்தை மறைத்தல், போக்ஸோ, வன்கொடுமை தடுப்பு என 6 பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்புபவர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Night
Day