புதுச்சேரியில் சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டி முழுகடையடைப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் கடத்தில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், சிறுமி உயிரிழப்பிற்கு காரணமாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாலை 6 மணிவரை நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. குறைந்த அளவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Night
Day