பீகாரிலிருந்து உ.பி.க்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பீகாரின் ஆராரியா பகுதியில் இருந்து உத்தரப்பிரேதசத்தில் உள்ள மதரசாக்களுக்கு பேருந்து ஒன்றில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திகு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சகாரன்பூர் பகுதியில் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பேருந்துக்குள் 95 சிறுவர்கள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் பெற்றோரின் ஒப்புதல் இன்றி மதரசாக்களுக்கு அழைத்து செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவர்களை மீட்ட போலீசார் அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day