உத்தரகாண்ட்: 36 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மலைப்பகுதியில் 36 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். உத்தரகாண்ட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நைனிடால் பகுதியில் நேற்று முன் தினம் காட்டு தீ ஏற்பட்டது. 36 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பீம்டல் ஏரியில் இருந்து தண்ணீரை கொண்டுவந்து தீயிணை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day