மதுரை: அழகர் கோவிலை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கள்ளழகர் கோவில் திரும்பும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 5ஆம் நாள் நிகழ்வாக தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து 8ம் நாள் நிகழ்ச்சியாக தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்க பல்லக்கில் எழுந்தருளிய அழகர் அழகர்கோவிலை நோக்கி புறப்பட்டார். மண்டகப்பட்டிகளில் எழுந்தருளிய கள்ளழகரை போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி கோவிந்தா கோவிந்தா என்ற பக்திகோஷம் முழங்க  தரிசனம் செய்தனர்.

Night
Day