மணிப்பூர்: ஆயுதம் ஏந்திய குழு தாக்கியதில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரின் பிஷ்ணுபூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படைகளின் புறக்காவல் நிலையத்தை தாக்கியது. நள்ளிரவு 12.30 மணியளவில் இருந்து அதிகாலை 2.15 மணி வரை நடந்த இந்த தொடர் தாக்குதலில், 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day