பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த பண்டிகை நல்லிக்கணக்கத்தை ஊக்குவித்து அமைதி கட்டமைப்பை வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த பண்டிகை நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளார். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் பெற வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day