நீட்தேர்வில் முறைகேடு - ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி,டி,எஸ்  மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் ஒரு பள்ளியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் துஷார் பட், அங்கிருந்த சில மாணவர்களிடம் நீட் தேர்வு முடிந்த பிறகு தேர்வுத்தாள்களில் பதில் எழுதி அனுப்புவதாக கூறி 10 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒரு மாணவர் துஷார் பட்க்கு முன்பணமாக 7 லட்சம் கொடுத்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து. குற்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர் துஷார் பட் உட்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Night
Day