எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஏழு பேர் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
இவற்றின் தாக்கம் பிற மாநிலங்களை காட்டிலும் கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளன.
இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,866ஆக அதிகரித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக கேரளாவில் ஆயிரத்து 487 பேருக்கும், தமிழகத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆகி அதிகரித்துள்ளது.
நீரிழிவு, உயர் ரத்தழுத்தம் மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களே கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.