நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடக்க ஒத்துழையுங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகளிருக்கான 33 இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை என்றார். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக முடிய அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தனது தலைமையிலான அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் பிரதமர் கூறினார்.

Night
Day