தேவேகவுடாவின் பேரன், மகன் மீதான பாலியல் புகாரால் ஜேடிஎஸ் கட்சிக்குள் குழப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ரேவண்ணாவையும், அவரது மகனையும் பிரஜ்வாலையும் கட்சியை வீட்டு நீக்குமாறு தேவகவுடாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வாலின் ஆபாச வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரது தந்தை ரேவண்ணா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கட்சியை வீட்டு நீக்குமாறு ஜேடிஎஸ் கட்சி தலைவர் தேவகவுடாவுக்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ. சம்ருதி மஞ்சுநாத் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் 19 எம்.எல்.ஏ.க்கள் முக்கியமா? அல்லது ரேவண்ணவும், பிரஜ்வாலும் முக்கியமா? என முடிவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

Night
Day