தெலங்கானா மக்‍களின் கனவுகளை சிதறடித்து விட்டன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரசும், பாரத் ராஷ்ட்ரிய சமிதியும் தெலங்கானா மக்‍களின் கனவுகளை சிதறடித்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவில் நாகர்கர்னுல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்‍ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலத்தை பாரத் ராஷ்ட்ர சமிதி முழுமையாக கொள்ளையடித்ததாகவும், தற்போது தெலங்கானாவை காங்கிரஸ் உற்று கவனிப்பதாகவும் குறிப்பிட்டார். காங்கிரசை பொறுத்தவரை மாநிலத்தை முழுமையாக சுரண்ட 5 ஆண்டுகள் போதுமானது என்று தெரிவித்தார். 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தெலங்கானா வளர்ச்சிக்‍கு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்‍களை வாக்‍கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தியாக குறிப்பிட்டார்.

Night
Day