தென்னாட்டினர் ஆப்பிரிக்கர்கள் போல் இருப்பதாக கருத்து - சாம் பிட்ரோடா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, அண்மையில் இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது. இது விவாதப்பொருளான நிலையில் அவர் தற்போது இந்தியர்கள் குறித்து இனரீதியாக பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அதில் இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போல இருப்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல் இந்தியாவின் தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சாம் பிட்ரோடா அளித்த ஒப்புமைகள் மிகவும் தவறானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர்கள் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரேன் சிங் ஆகியோரும் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Night
Day