டெல்லி விமான நிலையத்தில் 2-வது நாளாக விமான சேவை ரத்து - பயணிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் இருந்து ஜார்கண்டுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து விமான நிலையத்திற்குள் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தியோகருக்கு இண்டிகோ நிறுவனம் சார்பாக இயக்கப்பட விருந்த விமானம் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் விமான நிலையத்திற்கு உள்ளேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day