இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களை மட்டுமே தருவேன் எனவும், அவர்கள் சிபிஎம் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் எனவும் காங்கிரஸுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனை விதித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து மக்களவை தேர்தல் குறித்து மால்டா பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்ட மம்தா பானர்ஜி, கூட்டணி தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கி இருந்ததாகவும், அதற்கு மேல் கேட்டதால் கூட்டணியில் இருந்து விலகியதாகவும், சிபிஎம் கூட்டணியில் இருந்து விலகும்வரை, காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட அளிக்கபோவது இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...