ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்பட்ட ஷிபு சோரன், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருடைய உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிபு சோரன் இன்று காலமானார். 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருந்தவருமான சிபு சோரன், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக 3 முறை இருந்துள்ளார். மத்திய நிலக்கரித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதலமைச்சாரக உள்ளார். இதையடுத்து அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Night
Day