சிறைக் கைதிகளை சாதி, மத அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறைக் கைதிகளை சாதி, மத அடிப்படையிலான பிரிவினை மனப்பான்மையோடு நடத்தக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மதம், இனம், ஜாதி அல்லது பிறப்பிடம் சாந்த பாகுபாட்டுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் தடை விதித்துள்ளதாகவும், சமூக-பொருளாதார நிலையைக் கொண்டும் சிறைக் கைதிகளை வகைப்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சிறைச்சாலைகளில் சில மதம், சாதிகளைச் சோ்ந்தவா்களுக்குச் சிறப்பு சலுகை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண் கைதிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day