சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கோரி மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கோரி மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சந்தேஷ்காலி திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

Night
Day