சத்தீஸ்கர்: சாலையோரம் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து - 10 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பத்தரா பகுதியை சேர்ந்தவர்கள் சிலர், திரையா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு லாரியில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பெமேதரா நெடுஞ்சாலை அருகே அந்த லாரி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day