கைதே சட்டவிரோதம் என்பதால் அதனை எதிர்த்தே மனு : கெஜ்ரிவால் தரப்பு பதில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜாமீன் கோரி இதுவரை ஏன் மனுத் தாக்கல் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்தே மனுத் தாக்கல் செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு பதிலளித்துள்ளது., அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஜாமீன் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர். இதற்கு கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இடைக்கால ஜாமீன் மறுப்பு அல்லது பதில் அளிக்காதது ஆகியவை கைது செய்ய அடிப்படையாக இருக்க முடியாது என்றும் அதனால் கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்தே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Night
Day