கேரளாவில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து மேலும் 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக மேலும் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். கேரளாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 26ம் தேதி மக்களவை தேர்தலின்போது, 9 பேர் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு லெட்சுமி மற்றும் விஷ்வநாதன் ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநிலத்தில் வெப்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 

varient
Night
Day