ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் - பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். உத்தம்பூர் மாவட்டம் பசந்த்கர் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாரும், உள்ளூர் இளைஞர்கள் அடங்கிய கிராம பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் கிராம பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

Night
Day