குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று புதுச்சேரி வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று புதுச்சேரி வருகை தருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2 நாள் பயணமாக குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப்தன்கர் இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு விக்ஷித் பாரத்-2047 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அடுத்த நாள் காலை 7 மணிக்கு  சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மீண்டும் சென்னை வழியே டெல்லி செல்கிறார். இதையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, விழா நிகழ்விடத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Night
Day