குஜராத், அசாமில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செமி கண்டக்டர் தயாரிக்கும், உற்பத்தி நிறுவனத்துக்கான ஒன்னேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். மூன்று செமி கண்டக்டர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர் காணொலி காட்சி மூலம் இளைஞர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா செமி கண்டக்டர் சந்தையாக திகழும் என்ற மோடி, குஜராத் மாநிலத்தின் தோலேரா, சனாந்த், அஸ்ஸாம் மாநிலத்தின் மோரிகான் என மொத்தம் 3 இடங்களில் செமி கண்டக்டர் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். செமி கண்டக்டர் பேப்ரிகேஷன் செய்வதற்கு, 91 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

Night
Day