எழுத்தின் அளவு: அ+ அ- அ
சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு ராணுவம் இன்று அஞ்சலி செலுத்தியது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15 மற்றும் 16-ம் தேதிகளில் மோதல் ஏற்பட்டது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களாலும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பின்வாங்கிய சீனப் படையினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை சீன ராணுவம் தற்போது வரை வெளியிட மறுத்து வருகிறது. ஆனால், சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் உளவுப்பிரிவு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்தன.
இந்தநிலையில் கல்வான் மோதலின் 5-ம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்த வீரர்களுக்கான நினைவிடத்தில்ஸ இந்திய ராணுவம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.