எழுத்தின் அளவு: அ+ அ- அ
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 12ம் தேதி மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவத்தில விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட 274 பேர் உயிரிழந்தனர். விமான விபத்தில் குஜராத் முன்னள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பலியானார். இறந்தவர்களின் உடல்கள் கருகி இருந்ததால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த 3 நாட்களுக்குப் பின்னர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்ட விஜய் ரூபானியின் உடலுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாநில அமைச்சர்கள் ருஷிகேஷ் படேல், ஹர்ஷ் சாங்வி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜய் ரூபானியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.