கர்நாடகா : நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5.60 கோடி பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக போலீசார் நடத்திய சோதனையில் 5 கோடியே 60 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகை மற்றும் 68 வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெல்லாரி நகரில் வசிக்கும் நகைக்கடை உரிமையாளர் நரேஷ் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மொத்த மதிப்பு 7 கோடியே 60 லட்ச ரூபாய் என்றும் போலீசார் கூறியுள்ளனர். ஹவாலா தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் நகைக்கடைக்காரரை காவலில் எடுத்து விசாரித்த பின்னர் வருமான வரித்துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Night
Day