ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வங்கி அதிகாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாததால் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசிய கனரா வங்கி அதிகாரியின் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி உறுதியளித்துள்ளது.

கடந்த 4ம் தேதி வெளியான வீடியோ ஒன்றில், கனரா வங்கி அதிகாரி லோகபதி ஸ்வைன் என்பவர், வங்கியில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கை எட்டாததால் ஊழியர்களை கடுமையான வார்த்தைகளில் வசைபாடியுள்ளார். மேலும், விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் பணிப்புரிய வேண்டும் என்று வற்புறுத்தினார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், கனரா வங்கி தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளது. அதில், கனரா வங்கி தனது ஊழியர்களின் பங்களிப்பை மதிப்பதாகவும், சம்பந்தபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கி உறுதியளித்தது.

Night
Day