உயர்த்தப்பட்ட ஊதிய ஆணையை முதல்வர் ரங்கசாமி ஊழியர்களுக்கு வழங்கினார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் ரொட்டிபால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 18 ஆயிரம் ரூபாய் ஊதியத்துக்கான ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். 

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து ஊதிய உயர்வுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ரொட்டி பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 18 ஆயிரம் ரூபாய்க்கான ஆணையை வழங்கினர்.

Night
Day