புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய நலத்திட்ட உதவிகள், பயனாளிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான்கள், புதுக்கோட்டை மாவட்டம் கருக்கா குறிச்சி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் மற்றும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. நலத்திட்ட உதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு பகுதியில் அஇஅதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது, தங்களது வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான்கள் வழங்கி உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அவர்களின் கோரிக்கையை தாயுள்ளத்துடன் ஏற்று புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான்கள் ஆகியவை கறம்பக்குடி தாலுகா, கருக்கா குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு, கீழத்தெரு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கருக்கா குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.



Night
Day