இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரிப்பு என ஐஎல்ஓ அறிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகளின் விகிதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ. தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 29.1 சதவிகிதமாக உள்ளதாக கூறியுள்ளது. எழுத, படிக்கத் தெரியாதோருக்கான வேலை வாய்ப்பைவிட ஒன்பது மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், 12ஆம் வகுப்பு வரை படித்தோருக்கான வேலையில்லா திண்டாட்டம் 18 சதவிகித்தை தாண்டியுள்ளதாக கூறியுள்ள ஐ.எல்.ஓ., பட்டதாரிகள் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின், இந்தியாவின் கல்விமுறை செறிவுமிகுந்ததாக இல்லை என்ற கருத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.

varient
Night
Day